கதைகள்


   அன்புடன் உதவி செய்

ஒரு காட்டில் வசித்த சிறிய முயல் ஒன்று  இரை தேடுவதற்காக இருப்பிடத்தை விட்டு வெளியே வந்தது. அது ஒரு இடத்தில் மண்ணில் புதைந்திருக்கும் கரட் கிழங்கினைக் கண்டது. அந்த முயல் சிறியதாக இருந்ததால், அந்தக் கிழங்கைத் தோண்டி எடுக்க முடியவில்லை. அந்தக் கிழங்கைத் தோண்டி எடுக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தது. 


   அருகில் ஒரு மான் அங்கிருந்த பசும்புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. சிறிய முயல் அந்த மானிடம் சென்று,  அந்தக் கிழங்கை எடுத்துத் தந்து உதவும்படி கேட்டது. முயலின் கவலையைக் கண்ட அந்த மான் முயலை அழைத்துக் கொண்டு  சென்று, கிழங்கு புதைந்திருந்த இடத்தில் தன் கொம்பைக் கொண்டு சிறிது நிலத்தைக் கீறி விட்டது. அப்போது முயல் எளிதாக அந்தக் கிழங்கை எடுத்துச் சாப்பிட்டது. அந்த மானுக்கு நன்றி சொன்னது. முயல் மகிழ்ச்சியுடன் திரும்பியது. 

  புல்வெளிக்கு மீண்டும்  ஓடிச்சென்ற  மான், வேடன் ஒருவன் விரித்து வைத்த வலையில் சிக்கி அலறியது.  என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றது. மானின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த  முயல், மான் சிக்கியிருந்த வலையில் சில இடங்களைத் தனது கூர்மையான பற்களால் கடித்து வலையைத் துண்டித்து மானை விடுவித்தது. வலையிலிருந்து விடுவிக்கப்பட்ட மான் அந்தக் குட்டி முயலுக்குத்  தன் நன்றியையும் தெரிவித்தது. 

ஒருவருக்கொருவர் தங்களால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்குச் செய்திட வேண்டும்.


கோபம் கொள்ளாதே
 ஓர் ஊரில் ஒரு உழவன் வாழ்ந்து வந்தான். அவன் மான் ஒன்றை அன்பாக வளர்த்து வந்தான். அந்த மானும், அவனிடம் அன்பாக இருந்தது.ஒருநாள்  மான் காணாமல்



போய்விட்டது.  மானைத் தேடி ஊர் முழுவதும் அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. 
கோபத்தால் துடித்தான். கண்டுபிடிக்க அவன் செய்த முயற்சி எதுவும் பயன் தரவில்லை. மானைக் களவெடுத்தது யார்? என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

மானைக் கொன்றவனைக் கண்டுபிடிக்க  கடவுளை நினைத்து கடுமையான தவம் செய்தான். அவன் முன் கடவுள் தோன்றினார்.

"கடவுளே! என் மானைக் கொன்றவனை இங்கே கொண்டு வந்து நிறுத்துங்கள்' என்று கோபத்துடன் சொன்னான் . 


""அன்பனே! கோபம் கொடியது. யார் கோபம் கொள்கிறாரோ... அவரை அந்தக் கோபமே அழித்து விடும். கோபத்தை விடு. உன் மானை வேண்டுமானாலும் தருகிறேன். வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்,'' என்றார் கடவுள். 


கோபம் சிறிதும் அடங்காத அவன், ""எனக்கு மானும் வேண்டாம், வரமும் வேண்டாம். மானைக் கொன்றவன்தான் வேண்டும்,'' என்றான். 

""அப்படியே ஆகட்டும்,'' என்ற அவர் அங்கிருந்து மறைந்தார். 

அப்போது பயங்கரமாக கர்ஜித்தபடி சிங்கம் ஒன்று அவன் முன் தோன்றியது. 

""ஐயோ! என் மானைக் கொன்றது இந்தச் சிங்கமா? கோபத்தால், இப்படி ஒரு வரம் கேட்டு விட்டேனே. என்ன செய்வேன்?'' என்று அலறினான் அவன். 

அதை பொருட்படுத்தாத சிங்கம், அவன் மேல் பாய முற்பட்டது. அவன் ஒருவாறு தப்பிவிட்டான். அப்போதுதான் கோபம் கொள்ளக்கூடாது என்று உணர்ந்தான்.




ஒன்றுபட்டு வாழ்ந்தால்...


ஊசி ஒன்று தன் ஒரு முனை கூர்மையாக இருப்பதில் பெருமையடைந்தது. ஆனால் தன் மறுமுனை துவாரம் இருப்பதால் அதை அவமானமாகவும் நினைத்தது.

  ஒரு நாள் அதன் மறுமுனை உடைந்து போனது. காதறந்த நிலையில் அந்த ஊசியைப் பயன்படுத்தியவர் தூக்கியெறிந்தார். அப்போதுதான் அந்த ஊசிக்குத் தான் அவமானமாக நினைத்த மறுமுனையின் முக்கியத்துவம் தெரிந்தது.

ஒருவர் கூர்மையான புத்தியுள்ளவராக இருந்தால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. கூர்மையான ஊசி தன்னுள் நூலை நுழைத்துக் கொள்ள காது இருப்பதால் தான் அது பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. எனவே பிறருடன் இணைந்து வாழும்போது எதனையும் சாதிக்கலாம்.

காதறந்த ஊசி பயன் இல்லை. அது போல் பிறரைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் அன்பு இருந்தால் மட்டுமே சிறந்தவனாகத் திகழ முடியும்.

தாய் சொற் கேட்டால்....

        ஓவ்வொருநாளும் ஆற்றங்கரை ஓரத்துக்கு வருகின்ற பசுக்கன்று ஒன்று தனது நண்பனான கழுதையுடன் சேர்ந்து சுற்றித்திரிவது வழக்கம். சற்று தொலைவிலுள்ள கோயிலிலே இருக்கின்ற தாய்ப்பசு தன் கன்று கழுதையுடன் சுற்றித்திரிவதைக் கவனித்துவிட்டு ஒருநாள் தன் கன்றிடம் வந்து “மகனே! நீ ஏன் கழுதையோடு சுற்றித்திரிகிறாய்? என்னுடன் கோவிலில் இருந்தால் ‘கோவில் பசு’ என்று எல்லோரும் மரியாதையாக உன்னை வணங்குவார்கள்.அதுமட்டுமல்லாமல் நேரம் தவறாமல் உணவும் போடுகிறார்கள். நீ இங்கிருப்பதனால் கழுதை சாப்பிடுவது போன்று கடதாசி தானே சாப்பிடவேண்டும்”  என்றுகூறி அழைத்தது. “நீ உனது அலுவலைப் பார்த்துவிட்டு வந்தவழியே போய்விடு” என்று கடிந்துகொண்டது கழுதையுடன் கூட்டுச்சேர்ந்த பசுக்கன்று. 

    தாய்ப் பசுவும் கோவிலுக்குத் திரும்பிப் போய்விட்டது. நாட்கள் கடந்தோடின. ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக துணிப்பொதிகள் அதிகமாக இருந்ததால் கழுதையின் எஜமானரான சலவைத் தொழிலாளி, பொதிகளை இந்தப் பசுவின் முதுகிலும் ஏற்றி, வீட்டுக்கு விரட்டிச் சென்றார். தெருவழியே போய்க் கொண்டிருந்தபோது, பாரம் தூக்கி பழக்கமில்லாத பசுக்கன்று தள்ளாடியபடி நடந்து சென்று தெருவின் நடுப்பகுதிக்கு வந்தபோது, வேகமாக வந்த மோட்டார் வாகனம் பசுக்கன்று மேல் மோதிச்சென்றது. 

    பசுக்கன்று கீழே விழுந்தது. “ஒன்றுக்குமே உதவாத நீயெல்லாம் எதற்காகக் கழுதையுடன் சுற்றுகிறாய்”? என்று பசுக்கன்றைக் கடிந்துகொண்ட சலவைத் தொழிலாளி, பசுக்கன்றைத் தனது காலால் தெருவின் ஓரத்தில் தள்ளிவிட்டு, கீழே கிடந்த துணிப்பொதிகளை எடுத்துக்கொண்டு கழுதையையும் அழைத்துச் சென்றார். 

  பொழுது சாய்ந்தது. தெருவழியே வந்த சுவாமி ஊர்வலத்தில் தாய்ப்பசு பட்டு பீதாம்பரங்களுடன் சுவாமிக்கு முன்னால் பக்தர்களால் அழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்த கன்று “அம்மா, அம்மா” என்று கத்தியது. பக்தர்களின் ஆரவாரமும், தவில் நாதஸ்வர இசையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்ததால் கன்றின் கதறல் தாய்ப்பசுவுக்குக் கேட்கவேயில்லை. ஆனால் தலையைத் திருப்பிப் பார்த்த பசு கன்றைக் கண்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தது. தன்னுடன் கன்றை அழைத்துச் சென்றது. அதுதான் தாயன்பு.



ஏழையும் இறைவனும்


        ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

    ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

      அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான். செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

      ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்  பட்டான். மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

    அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான். செல்வந்தனுக்குப் புரிந்தது .

   அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!

The Little Red Hen
   
The little Red Hen was in the farmyard with her chickens, when she found a grain of wheat.

"Who will plant this wheat?" she said.

"Not I," said the Goose.






             "Not I," said the Duck.



"I will, then," said the little Red Hen, and she planted the grain of wheat.

When the wheat was ripe she said, "Who will take this wheat to the mill?"

"Not I," said the Goose.

"Not I," said the Duck.

"I will, then," said the little Red Hen, and she took the wheat to the mill.

When she brought the flour home she said, "Who will make some bread with this flour?"

"Not I," said the Goose.

"Not I," said the Duck.

"I will, then," said the little Red Hen.

When the bread was baked, she said, "Who will eat this bread?"

"I will," said the Goose

"I will," said the Duck

"No, you won't," said the little Red Hen. "I shall eat it myself.  Cluck! cluck!"  And she called her chickens to help her


No comments:

Post a Comment